1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 மார்ச் 2019 (15:00 IST)

புது பிஸ்னஸ்; ரூ.72 கோடிக்கு ப்ளாட்: லண்டனில் ஜாலியாய் ஊர் சுற்றும் நீரவ் மோடி

இந்தியாவின் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து தற்போது வெளிநாடு தப்பினார். 
 
இந்த வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
அனால், அவர் லண்டனின் ஜாலியாக சுற்றி வருகிறார். தாடி மீசை என தனது கெட் அப்பை மாற்றி லண்டன் சாலைகளில் பயம் இல்லாமல் சுற்றி திறிகிறார். 
 
தி டெலிகிராப் என்னும் ஆங்கில ஊடகம் நீரவ் மோடியை படம் பிடித்து தர்போது வெலியிட்டுள்ளது. மேலும் நீரவ் மோடி, லண்டலின் வைர பிஸ்னஸ் துவங்கிவிட்டதாகவும், ரூ.72 கோடி மதிப்பிலான ப்ளாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.