1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. night lockdown in andhra pradesh

ஆந்திராவிலும் இரவு நேர ஊரடங்கு: திரையரங்குகளுக்கும் கட்டுப்பாடு!

ஆந்திரா
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அம்மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
ஆந்திராவில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அது மட்டுமின்றி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே தமிழ்நாடு கேரளா கர்நாடகம் புதுவை ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆந்திராவிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கொரோனா பணிக்கு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதாரத்துறை