1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (12:05 IST)

மர்ம நபர் இளம்பெண்ணை பிறப்புறுப்பில் கம்பியால் குத்தி கொலை

பீகார் தலைநகர் பாட்னாவில் இளப்பெண்ணின் பிறப்புறுப்பில், மர்ம நபர் இரும்புக் கம்பியால் குத்தி கொலை செய்துள்ளார்.  அவரைக் கொன்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பாட்னா மாவட்டத்தில் உள்ள சிற்றூர் என்ற கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளப்பெண் ஒருவர் இயற்கை உபாதைக்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். இதனை பார்த்துகொண்டிருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட  தகராறில் வெறிப்பிடித்த இளைஞர் இரும்புக் கம்பியால் பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியால் குத்தி கொலை செய்துள்ளார். 
 
இதில் படுகாயமடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்துப் அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் இளைஞரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.