வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:24 IST)

மருமகன்களோடு தகாத உறவு வைத்திருந்த மாமியார் – கண்டித்த உறவினருக்கு நேர்ந்த விபரீதம் !

ஆந்திராவில் மருமகன்களோடு தகாத உறவு வைத்திருந்த மாமியார் அதைக் கண்டுபிடித்தவரைக் கொலை செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த மத்திய வயது பெண்ணுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட பெண் தன் இரு மருமகன்களோடும் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். இதைக் கண்டித்த அவரது கணவரையும் அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவரின் உறவினர் ஒருவர் இதுகுறித்து அந்த பெண்ணிடம் பேசிக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தன் இரு மருமகன்களை வைத்து அவரைக் கொலை செய்துள்ளார். இதையறிந்த அந்த உறவினரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவரையும் புகாரைத் திரும்ப பெற சொல்லி மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் அந்த பெண் தைரியமாக இருக்கவே போலிஸார் இப்போது அவர்களைக் கைது செய்துள்ளது.