1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Modi praises Tamil language

”தமிழ் மொழி அழகு நிறைந்தது”.. தமிழர்களை நெகிழவைக்கும் மோடி

மோடி
தமிழ் மொழி மிகவும் அழகு நிறைந்தது என பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பிரதமர் மோடி சமீப நாட்களாகவே எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழில் சில பழமொழிகள் மேற்கோள்காட்டி பேசி வருகிறார். சீன அதிபரை சந்தித்த நிகழ்வு கூட தமிழகத்தின் மாமல்லபுரத்தையே தேர்ந்தெடுத்தார்.

இதை தொடர்ந்து மாமல்லபுரத்தை வர்ணித்து, பிரதமர் மோடி ஒரு கவிதையையும் எழுதியுள்ளார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் நடிக விவேக் ஆகியோர் பிரதமரின் தமிழ்பற்றை குறித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “தமிழ் மிகவும் அழகான மொழி, தமிழர்கள் தனித்துவமானவர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாமல்லபுர கடற்கரையின் எழிலும், அழகும் எனது எண்ணங்களை வெளிக்கொணர உரிய தருணத்தை உருவாக்கி தந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மோடியின் திடீர் தமிழ் பாசம், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கான ஒரு அரசியல் முயற்சி எனவும் பலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
ஜாமீன் கிடைத்தும், ப.சிதம்பரத்திற்கு சிறையே கதி!!