1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (20:25 IST)

மனித உடலின் கண்களை தின்ற எலிகள்...

ஆந்திர மாநிலம் எலுரு அரசு மருத்துவமனையில், உள்ள பிணவறையில் இருந்த மனித உடலின் கண்களை எலிகள் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வைகுந்த வாசு. இவர் கடந்த செவ்வாய் கிழமை உயிரிழந்தார். இவரது உடல் எலுரு மருத்துவமனையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
 
இதனையடுத்து, புதன் கிழமை காலையில் இவரது உடலை வாங்க உறைவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது வாசுவின் பிரேதத்தில் இருந்த கண்களை எலிகள் கடித்து தின்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
 
பின்னர், மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், பிரீசர் வேலை செய்யாததால் இந்த தவறுகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.