1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:06 IST)

உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. 
 
இங்கிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் முக கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. 
 
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. கவுதம் புத்த நகர், லக்னோ, காஸியாபாத், மீரட் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாகிறது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு மாநில அரசுகள் வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது.