வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By vinothkumar
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:41 IST)

முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா – குணமாகி வீடு திரும்பியவர் உயிரிழப்பு!

மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் நிலேங்கர் தனது 89  ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் நிலங்கேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பிய அவர் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 89  ஆகும்.