1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (18:59 IST)

பங்குச்சந்தை சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

பங்குச்சந்தை சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!
பங்குச்சந்தை ரகசியத்தை கசியவிட்டதாக கூறப்படும் முன்னாள் பங்கு சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டிஸ் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தை மேலாண் இயக்குனராக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணன். இவரது வீட்டில் நேற்று அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் 
 
இந்த நிலையில் தேசிய பங்குசந்தை விவரங்களை விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா எதிராக லுக்-அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணன் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ ரவி நாராயணன் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதை தடுக்கும் நோக்கத்தில் சிபிஐ அதிகாரிகள் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன