வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஜூலை 2020 (08:08 IST)

ஒரு வருடம் மட்டுமே பாடக்குறைப்பு: சிபிஎஸ்இ விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த கல்வி ஆண்டு மிகவும் குறுகிய காலமாக இருக்கும் என்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30 சதவீதம் குறைப்பு என மத்திய அரசு முடிவு செய்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த பாடக்குறைப்பு இந்த ஆண்டு மட்டுமா அல்லது வரும் ஆண்டுகளில் தொடருமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது. இதனை அடுத்து சிபிஎஸ்இ அளித்துள்ள விளக்கத்தில் 9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடங்கள் 30% குறைப்பது என்ற முடிவு 2020-21 கல்வி ஆண்டு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற ஆண்டுகளுக்கு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது
 
இந்த கல்வி ஆண்டின் மாதங்கள் மிகவும் குறைவு என்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இந்த ஆண்டுக்கு மட்டுமே இந்த பாடக்குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
 
மேலும் குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்தவிதமான கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் என்சிஇஆர்டி முன்மொழிந்துள்ள மாற்றுக் கல்வி நாட்காட்டி திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகம் தீர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது