தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் வகுப்புக்கு தடையில்லை! - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
- 5 நாளைக்கு ஆன்லைன் க்ளாஸ் லீவ்! – மாணவர்கள் மகிழ்ச்சி!
- ஆன்லைன் வகுப்பு அவசியம் இல்ல! பள்ளிக்கல்வி ஆணையம்! – மாணவர்கள் ஹேப்பி!
- ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்ய பாமக கோரிக்கை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?
- ஆன்லைன் வகுப்பு புரியவில்லை: விரக்தியில் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை
3 மாதங்களில் 350 ஆன்லைன் வகுப்புகள்… உலகசாதனை படைத்த கேரள மாணவி!
கொரோனா லாக்டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 350 ஆன்லைன் கோர்ஸ்களை படித்து முடித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த மாணவி.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கிட்டத்தட்ட 6 மாத காலமாக அமலில் உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரி போன்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதைப்பயன்படுத்தி கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 3 மாதங்களில் 350 ஆன்லைன் வகுப்புகளை படித்து முடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஆரத்தி ரெகுநாத், யுனிவர்சல் ரெக்கார்ட் மன்றத்தில் (யுஆர்எஃப்) இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் கேரளாவில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் பயோ கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
