1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (13:32 IST)

நவீனின் உடலை இந்தியா கொண்டுவரப்போவது எப்போது?

நவீன் உடலை இந்தியா கொண்டுவருவதற்கும் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி.

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
கார்க்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியாகினார். அவர் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் நவீனின் உடலை பாதுகாப்பதற்கும் அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கும் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 
 
மேலும் நவீனின் நண்பர்கள் அவரது உடலின் புகைப்படத்தை அனுப்பியுள்ளனர், அதை உறுதிப்படுத்துவதற்காக வெளியுருவத்துறைக்கு அனுப்பியுள்ளோம் எனவும் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் எனவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.