தொடர்புடைய செய்திகள்
- நேரடி இலவச தரிசனம் ரத்து: திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!
- 141 எம்.பிக்கள் இடைநீக்கம்..! மத்திய அரசை கண்டித்து விசிக போராட்டம்!
- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
- எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: நாடு தழுவிய போராட்ட அறிவிப்பை வெளியிட்ட 'இந்தியா' கூட்டணி
- 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு..!
கன்னட மொழியில் பெயர் பலகை இல்லாத கடைகள் உடைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம்..!
கன்னட மொழியில் பெயர் பலகை வைக்காத கடைகள் கன்னட அமைப்பினர்களால் உடைக்கப்பட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் கன்னட அமைப்பு ஒன்று திடீரென கன்னட மொழியில் பெயர் பலகை இல்லாத கடைகளின் பெயர் பலகையை உடைக்கும் போராட்டத்தை நடத்தி வருகிறது.
இதனை அடுத்து அந்த அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் போலீசாரையும் மீறி கன்னட மொழியில் பெயர் பலகை இல்லாத கடைகளின் பெயர் பலகைகளை உடைத்தனர். இதனால் போலீசாருக்கும் கன்னட அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் பெங்களூர் நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 6ஆம் தேதிக்குள் பெங்களூரில் உள்ள அனைத்து கடைகளிலும் கன்னட மொழியில் பெயர் பலகை குறிப்பிட வேண்டும் என்றும் ஒரு முழு பெயர் பலகையில் 60% இடத்தில் கன்னட மொழி பெயர் தான் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
