தொடர்புடைய செய்திகள்
- இவன் நம்பல பராட்டுறான திட்றானா? அமெரிக்காவை கன்ஃபூஸ் பண்ண சீனா!!
- வந்தாச்சு 9 லட்சம் தடுப்பூசிகள்... 18 வயத்துக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல்!
- இரு வேறு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உங்கள் உடலில் என்னாகும்?
- கொரோனா தடுப்பூசி: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!
- கொரோனா தடுப்பூசி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை… முதல்வர் அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 120 வயது பாட்டி
ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் இருக்கும் தூது எனும் ஒரு தொலைதூர கிராமத்தில் 120 வயதாகும் தோலி தேவி எனும் மூதாட்டி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.
வயது குறைவாக உள்ளவர்களே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சம் நிலவும் சூழ்நிலையில் 120 வயதாகும் தோலி தேவி தடுப்பூசி எடுத்துக்கொண்டது பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீர் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
பிறருக்கு முன்னுதாரணமாக தோலி தேவி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக, இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டலத்தின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, வெள்ளியன்று மூதாட்டியின் வீட்டுக்கு சென்று, அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.
அடுத்த கட்டுரையில்
