1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (16:48 IST)

கொரோனா தடுப்பூசி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை… முதல்வர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோவா முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.