தொடர்புடைய செய்திகள்
- 88 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி! அதிர்ச்சியில் அமெரிக்கா!
- சீனாவிடம் எச்ச சோறு சாப்பிடும் நீயெல்லாம்...? எஸ்வி சேகரின் கடுமையான விமர்சனம்
- 5ஜி டவரால் கொரோனா வைரஸ் பரவுமா? வதந்தியால் ஏற்பட்ட விபரீதம்
- கொரோனாவை விட கொடூரமானது பட்டினிசாவு! – மு.க.ஸ்டாலின் அறிக்கை!
- அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ்! அப்படி என்ன சொன்னார்கள்?
6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் உச்சம்!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 1138 பேரும், தமிழகத்தில் 738 பேரும், டெல்லியில் 669 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 149லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 411 லிருந்து 473 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
