வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (09:18 IST)

ராணுவ வீரர்களுக்கான குளிர்கால உடை – அமெரிக்காவில் இருந்து வருகை!

இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கான் குளிர்கால உடைகள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

இந்திய சீனா எல்லையான லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும் அங்கே வீரர்களை குவித்துள்ளது. 15,000 அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். இந்நிலையில் விரைவில் குளிர்காலம் வேறு தொடங்க உள்ளதால் குளிர் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வீரர்களுக்கான குளிர்கால உடையை அமெரிக்காவில் இருந்து வாங்கியுள்ளது அமெரிக்க அரசாங்கம்.  கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தான தளவாட பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் உடைகள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.