1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (14:52 IST)

இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தமானது என்னென்ன??

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளதை தொடர்ந்து, சபர்மதி காந்தி ஆசிரமம், தாஜ் மஹால், காந்தி நினைவிடம் ஆகியவற்றை தனது மனைவியுடன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன் படி, இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி, ரோமியோ ஆகிய ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு தர ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.