வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (11:33 IST)

ஒரே நாளில் ஒரு ஓடி பேருக்கு தடுப்பூசி: இந்தியாவில் எப்போது சாத்தியம்?

ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு போதுமான அளவு டோஸ்கள் கிடைக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 3,207 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,35,102 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,61,79,085 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,93,645 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 21,85,46,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு போதுமான அளவு டோஸ்கள் கிடைக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிப்பு அதிகரிக்கப்படும் எனவும், ஸ்புட்னிக் வி தடுப்பூசி 2.5 கோடி டோஸ் ஆகஸ்ட்டில் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.