1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (14:09 IST)

இஸ்ரோ முன்னாள் தலைவர் க‌ஸ்தூரி ரங்கனுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இஸ்ரோ முன்னாள் தலைவர் மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் தலைவர் கஸ்தூரி ரங்கன் கடந்த வாரம் இலங்கை சென்று இருந்த நிலையில் அங்கு திடீர்னு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் கொழும்பு விரைந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் கஸ்தூரி ரங்கன் படிப்படியாக குணமாகி வருகிறார் என்றும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய கர்நாடக முதல் சித்தராமையா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva