வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (07:50 IST)

மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு: ஊரடங்கை மீறினால் கடும் அபராதம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு ஒரு சில நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
 
இந்த நிலையில் இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்றும் ஊரடங்கு மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது
 
இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என்றும் அவ்வாறு வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
மேலும் பகல் நேரத்தில் வெளியே வரும்போது மக்கள் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூபாய் 500 அபராதம் என்றும் இரவு நேர ஊரடங்கு விதியின் போது வெளியே வந்தால் ஆயிரம் அபராதம் என்றும் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது
 
இன்று முதல் அமல் படுத்தப்படும் ஊரடங்கு காரணமாக சினிமா அரங்குகள் மால்கள் உணவகங்கள் உள்ளிட்டவை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை திறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஹோம் டெலிவரி அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அலுவலகங்களில் உள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் தான் செயல்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு அலுவலரும் அலுவலகத்திற்கு வந்த பின்னர் உடல்வெப்ப பரிசோதனை செய்து கொண்டு சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது