1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (22:13 IST)

நடுரோட்டில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்ணுக்கு அபராதம்!

vaishali uttar pradesh reels
உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையில்  நின்று ஆபாச ரீல் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மா நிலம் காசியாபாத்தில் வசிப்பவர் வைஷாலி சவுத்ரி. இவருக்கு சமூக வலைதள பக்கத்தில் 7 லட்சம் பேர்  பின் தொடர்கின்றனர்.

இவர்  சில நாட்களுக்கு முன்பு, சாஹியாபாத்தில் உள்ள  பிரதான சாலையில்  நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்து,அதை பதிவிட்டார்.

இது வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் விமர்சனம் மற்றும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், போலீஸார், ரீல்ஸ் எடுத்த வைசாலியை கண்டுபிடித்து, அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்தனர்.