1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (07:56 IST)

மூன்று மாநிலங்களில் நிலநடுக்கம்: பரபரப்பு தகவல்

இந்தியாவிலுள்ள 3 மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
அசாம் மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் சோனிட்பூர் மணிப்பூரில் உள்ள சாந்தெல் மற்றும் மேகலாவின் மேற்கு காசி மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ரிக்டர் அளவுகோலில் 4.1, 30 மற்றும் 2.6 என நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்படும் சேதம் குறித்த தகவல் எதுவும் இதுவரை தெரியவில்லை 
 
மேலும் இதுவொரு லேசான நிலநடுக்கம் தான் என்பதால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்றும் புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக மூன்று மாநிலங்களில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது