1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Dravidanaadu on Twitter - Hot Trends

மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நெட்டிசன்கள்

மாட்டிறைச்சி
மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு தடை உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது திராவிட நாடு கோஷம் ட்விட்டரில் எழுந்துள்ளது. இதற்காக நெட்டிசன்கள் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


 

 
மத்திய அரசு மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்ததை அடுத்து நாடு முழுவதும் பலரும் அதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். கேராள மாநில முதல்வர் இந்த தடைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
தினசரி உணவில் மாட்டிறைச்சி சேர்த்துக்கொள்ளும் கேரள மக்கள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் திராவிட நாடு என்ற கோஷம் எழுந்ததைத்தொடர்ந்து தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. 
 
இதையடுத்து ட்விட்டர் தளத்தில் அனைவரும் தென் இந்தியா முழுவதையும் இணைத்து திராவிட நாடு என்று குறிப்பிட்டு தங்களை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த திராவிட நாடு ட்விட்டரில் டாப் ட்ரண்டிங்கில் உள்ளது. மாட்டிறைச்சி தடை மூலம் திராவிட நாட்டை நினைவுப்படுத்திய மோடிக்கு நன்றி என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
மரியாதை தெரியாத இளங்கோவன் வெளியில் வர முடியாது: மிரட்டும் அதிமுக!