தொடர்புடைய செய்திகள்
- கேன்சல் செய்தால் ஓலா, ஊபர் டிரைவர்களுக்கு அபராதம்! – போக்குவரத்து காவல்துறை!
- கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரபல காமெடி நடிகர் !
- ஆர்.எஸ்.எஸ் பிரதமர் புளுகுகிறார்! – பங்கமாய் கலாய்த்த ராகுல் காந்தி!
- காப்பான் பாணியில் வந்த வெட்டுக்கிளிகள்: மேளம் அடித்து விரட்டும் மக்கள்!
- டெல்லியில் அதிமுக ஆஃபிஸ்: வேலைகளை மும்முரமாக முடுக்கிவிட்ட ஈபிஎஸ்!
டெல்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு – மக்கள் அவதி!
தலைநகர் டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை தற்போது ஓரளவு குறைந்துள்ள சூழலில் பனிப்பொழிவும், குளிரும் மக்களை வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் நவம்பர் மாதம் முதல் தொடங்கும் பனிக்காலம் பிப்ரவரி வரை 4 மாதங்கள் நீடிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 22 ஆண்டுகாலமாக இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் மிகவும் குறைந்த பட்ச வெட்பநிலையாக 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. அதீத பனி பொழிவால் சூரிய உதயத்தை கூட மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலைகளில் 100 மீட்டர் அருகே உள்ள பொருட்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
