தொடர்புடைய செய்திகள்
- இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பரப்பிய மாணவி! – பழிவாங்க நடந்த பகீர் சம்பவம்!
- குக்கர், பணம் விநியோகம்; ஈரோடு கிழக்கில் பரபரப்பு! – 2 வழக்குகள் பதிவு!
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யுங்கள்: தேமுதிக மனு..!
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- ஈரோடு கிழக்குத் தொகுதி: தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடக்கம்..!
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் - ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் - ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி
டெல்லி மாநகராட்சியின் மேயர் தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே ஒரு வழியாக நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு பின் டெல்லி மாநகராட்சிக்கு பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் 15 ஆண்டுகளாக டெல்லி மேயர் பதவி பாஜகவிடம் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது.
மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட டெல்லி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்த முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் டெல்லி மாநகராட்சி மேயராக ஷெல்லி தேர்வு செய்யப்பட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Edited by Mahendran
