1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (15:01 IST)

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளைத் தண்டிக்க முடியுமா? நீதிமன்றம் கருத்து

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டிக்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
2014ஆம் ஆண்டு தேர்தலின்போது அமித்ஷா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி அவர் மீது ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார் 
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகள் கட்சியின் கொள்கையை காட்டுவதாகவும் அதை நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார் 
 
மேலும் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளை தண்டனைக்கு உள்ளாக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்