தொடர்புடைய செய்திகள்
- டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...
- டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?
- பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..
- விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!
- 10 நிமிடங்கள் மட்டுமே விஜயை சந்தித்த மோடி!.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு?!..
காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..
தமிழக முதல்வர் விஜய் நேற்று அரசு முறை பயணமாக டெல்லி சென்றார். நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது சில கோரிக்கைகள் கொண்ட ஃபைலை அவரிடம் விஜய் கொடுத்தார். அதன்பின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
அதன்பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விஜய் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. எனவே, முதல்வர் விஜய் தமிழகம் திரும்பினார். ராகுல்காந்தியை சந்திக்காமல் விஜய் சென்னை திரும்பியது விவாதங்களை கிளப்பியது.
இந்நிலையில், இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் விஜயின் டெல்லி வருகை ஒரு முழு அரசு முறை பயணம் மட்டுமே. ஜூன் 11ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் டெல்லி வரும்போது சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை விஜய் சந்திப்பார் என நினைக்கிறேன்.
தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பது ஒன்றும் கடினம் அல்ல. கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் நிகழ்கிறது. அதேபோல், ஜார்கண்ட் ஆர்.எஸ். எம்.பி விவகாரம் தொடர்பாக பேசுவதிலும் தலைவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். அடுத்தமுறை விஜய் டெல்லி வரும் போது கண்டிப்பாக அவரை ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நிச்சயம் சந்திப்பார்கள். இதை பெரிதுப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறினார்.
அதன்பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விஜய் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. எனவே, முதல்வர் விஜய் தமிழகம் திரும்பினார். ராகுல்காந்தியை சந்திக்காமல் விஜய் சென்னை திரும்பியது விவாதங்களை கிளப்பியது.
இந்நிலையில், இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் விஜயின் டெல்லி வருகை ஒரு முழு அரசு முறை பயணம் மட்டுமே. ஜூன் 11ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் டெல்லி வரும்போது சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை விஜய் சந்திப்பார் என நினைக்கிறேன்.
