தொடர்புடைய செய்திகள்
- கல்லூரியில் மாணவனுக்கு மொட்டை அடித்து ராகிங்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்
- பெண்களை பணயமாக வைத்து பாலஸ்தீனியர்கள் கைது.. இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்..!
- கோவை தனியார் கல்லூரியில் ராகிங் கொடுமை! – 7 மாணவர்கள் கைது!
- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 - புதுச்சேரி அரசு அறிவிப்பு
- 'உங்கள் அன்பான வாழ்த்தில் அக மகிழ்கிறேன்' -முதல்வருக்கு நன்றி கூறிய கமல்
கோவில் பூசாரிகள் எல்லாம் ரேப்பிஸ்ட்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்., எம்எல்ஏ கைது..!
கோவில் பூசாரிகள் எல்லாம் ரேப்பிஸ்ட் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அசாம் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ அஃப்தாப் உதீன் மொல்லா என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது இந்துக்கள் இருக்கும் இடத்தில் தவறுகள் நடக்கும் என்றும் கோவில் பூசாரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாவலர்கள் ரேப்பிஸ்ட் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து எம்எல்ஏ அஃப்தாப் உதீன் மொல்லாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கூறிய போதிலும் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
குறிப்பிட்ட மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
