1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:58 IST)

அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மூடல்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து நூறுநாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று ஆந்திராவிலும் அனைத்துக் கட்சிகள் சார்பில் பந்த் தொடங்கியது.

இந்த பந்த்தையொட்டி நள்ளிரவு முதல் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும் தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.