பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது அமலாக்கத்துறை!

Written By Mahendran
Updated: வியாழன், 14 ஜூலை 2022 (16:30 IST)
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கடந்த மார்ச் மாதம் சிபிஐ போலீசார் கைது செய்து. இந்நிலையில் அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் பங்குசந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா அமலாக்கத்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பங்குச்சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோலோகெஷன் என்ற வசதி 2010ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தி சில சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை செய்துவருகிறது.
 
இந்த நிலையில் அமலாக்கத் துறையும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
 

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments