1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (22:21 IST)

இந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீனா!

லடாக்கில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் சீனா ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு  இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் சீனாவைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்திய ராணுவர் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அத்துமீறி தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்படும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ள வேளையில், கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்திய – சீனா இடையே மோதல் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மேக்னடிக் மஹாராஷ்டிரா திட்டத்தின் கீழ் சீன நாட்டின் 3 நிறுவனங்கள் உள்ளிட்ட 12 வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1.6ஆயிரம் கோடியில் அம்மாநிலத்தில் செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும்,சீனாவைச் சேர்ந்த பிஎம் ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி சொல்யூசன் , ஜேவி வித் போட்டான் மற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் புனே மாவட்டத்தில் முதலீடு செய்யும் எனவும், ஆட்டோ துறையில் ஹெங்கில் இன்ஜினியரிங் ரூ.250 கோடியிலும், பிஎமை ரூ.1000 கோடியிலும் முதலீடு செய்யவுள்ளதாகவும், கிரேட் வால் மோட்டார்ஸ் ஆட்டோ மொபைல் துறையில் ரூ.3.770 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.