1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (22:10 IST)

தோனியை நம்பி நான் இருந்தேனா … என்னால் பதில் சொல்ல முடியாது - பிரபல வீரர் காட்டம்

இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை சார்ந்து நான் இருந்தேன் என்பது குறித்து, என்னால் பதிலளிக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், தோனி பெரும்பாலான போட்டிகளி விளையாடவில்லை. அதனால் அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், தோனியில் மனைவி சாக்‌ஷி தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்த குல்தீப் யாதவ், தோனி உலகக் கோப்பைக்கு பின் விளையாடததால் அதுகுறித்து நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்றும் , நான் தோனியைச் சார்ந்து இருந்தேனா என்பது குறித்து என்னால் பதிலளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.