1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Chatisgarh cow having three eyes

3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி: சிவபெருமானின் அவதாரம் என மக்கள் வழிபாடு!

சத்தீஸ்கர்
3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி: சிவபெருமானின் அவதாரம் என மக்கள் வழிபாடு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று கண்களுடன் பிறந்த கன்றுகுட்டியை சிவபெருமானின் அவதாரம் என அந்த பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சத்தீஸ்கர் மாநிலம் ராஜன்கான் என்ற பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்து வரும் மாடு கன்றுக்குட்டி ஒன்றை ஈர்ந்த்து. இந்த கன்றுக்குட்டிக்கு மூன்று கண்கள் இருந்ததை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அந்த கன்றுக்குட்டியை பார்க்க குவிந்து வருகின்றனர். நெற்றிப் பகுதியில் மூன்றாவது கண் இருப்பதால் இந்த கன்றுக்குட்டி சிவபெருமானின் அவதாரம் என வர்ணித்து அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்
 
 மூன்று கண்கள் மற்றும் நான்கு மூக்குத் துவாரங்கள் உடன் பிறந்த இந்த அபூர்வ கன்றுகுட்டி குறித்து ஆய்வு செய்து வருவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நரகத்தின் வாசலை மூடும் துர்க்மெனிஸ்தான்..! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!