வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:27 IST)

நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திராயன் – இலக்கை அடைந்து சாதனை !

விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் புவியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.

இதுவரை யாரும் ஆய்வு செய்திடாத நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா சந்திராயன் 2 விண்கலத்தைக் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியது.  இந்த விண்கலம் மூலம் நிலவை மேலும் புரிந்துகொள்ளவும், இந்தியாவுக்கும் மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முயல்கிறோம்.’ என இஸ்ரோ விஞ்சானிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி நிலவின் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திராயன் 2 நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி புவி சுற்று வட்டப்பாதையிலிருந்து நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திராயன் 2. விநாடிக்கு 10.3 கி.மீ வேகத்தில் பயணித்து இன்று காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதன் பின் நிலவின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு அதன் வேகம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.