1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:30 IST)

வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் தளர்வு! – மத்திய அரசு அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் மத்திய அரசு தளர்வுகள் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது விமான சேவைகள் தொடங்கபட்டிருந்தாலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கிறது. அதன்படி இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளதால் 99 நாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் தளர்வுகளை வழங்கியுள்ளது மத்திய அரசு.