1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (11:01 IST)

பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த சிபிஎஸ்இ திட்டம்?

மாணவ - மாணவியருக்கான பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என தகவல். 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் மாணவர்களுக்கு பாடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
 
இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி முதல் பருவத்தேர்வு தொடங்குகிறது என்றும் அதேபோல் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான முதல் பருவ தேர்வு சிபிஎஸ்இ அட்டவணை வெளியான நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கான பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த அந்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.