இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாட்டில் பருவமழை காலம் முடிந்த நிலையில், தற்போது பனிக்காலம் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில வாரங்களில் கோடைக்காலம் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனிமேல் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும், அதாவது ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேளையில் மட்டும் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 5 முதல் 9ஆம் தேதி வரை வறண்ட வானிலை தான் நிலவும் என்றும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வேளையில் சென்னை உள்பட பல பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்பட்டது. நாளையும் மேகமூட்டத்துடன் கூடிய பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் கோடைக்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், பொதுமக்கள் அதற்கு தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran