1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 21 மே 2022 (23:59 IST)

போலி எண்கவுண்டர் தொடர்பாக போலீஸார் மீது வழக்குப்பதிவு

தெலுங்கானா மாநிலத்தில் போலி எண்கவுண்டர் தொடர்பாக போலீஸார் மீது வழக்குப்பதிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் அருகே சத்தனப்பள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய   4 பேரை காவல்துறையினர் எண்கவுண்டர் செய்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த எண்கவுண்டர் தொடர்பாக  நீதிபதி வி.எஸ்.  சிர்புகர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் விசாரித்த பின், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், போலியான எண்கவுண்டர் நடத்தி 4 குற்றவாளிகளும் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவுப் பதிவு செய்ய ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.