ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (17:49 IST)

தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை...போலிஸார் விசாரணை

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரியல் எஸ்டேட் ரமேஷ்.இவருக்கு லதா என்ற மனைவி மற்றும் 2 குழந்தைக்கள் உள்ளனர். இவர் இரண்டாவதாக பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரமேஷ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு வேறு எதாவத் காரணம்  உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.