தொடர்புடைய செய்திகள்
- நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை: ரூ.15,000 கோடி ஒப்பந்தத்தை பெற்ற டாடா குழுமம்!
- பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்புக்கான புதிய சலுகை திட்டம் அறிமுகம்!
- தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு..!
- இன்று முதல் தமிழகத்தின் 19 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு
- இன்று முதல் மேலும் 50 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை: தமிழகத்தில் எந்தெந்த நகரங்கள்?
பி.எஸ்.என்.எல் 4ஜி, 5ஜி சேவை எப்போது? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்..!
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி மற்றும் 5ஜி சேவை கிடைப்பது எப்போது என்ற தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைதொடர்பு நிறுவங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவை தற்போது 5ஜி சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
ஆனால் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இன்னும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை 200 இடங்களில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிஎஸ்என்எல் 5ஜி சேவையும் அறிமுகப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
