1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (08:55 IST)

பூஸ்டர் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்த நிறுவனம்!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது
 
உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனை அடுத்து பூஸ்டர் தடுப்பு ஊசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது
 
ஏற்கனவே இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி தயாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் இந்தியாவிலும் அந்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது
 
மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதற்கு அனுமதி வழங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்