1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bihar student have gun in school

பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கி எடுத்து சென்ற சிறுவன்! – பீகாரில் பீதி!

National
பீகாரில் பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முறைகேடாக தயாரித்து விற்கப்படும் துப்பாகிகள் காவல்துறைக்கு தலைவலியாக மாறியுள்ளன. இதனால் மாநிங்களில் வன்முறைகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீகாரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முசாபர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளான். சிறுவனிடம் துப்பாக்கி இருப்பதை கண்ட மற்ற சிறுவர்கள் ஆசிரியர்களிடம் சொல்ல, காவல்துறைக்கு தகவல் தெரிந்து சிறுவனை சிறுவர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதை பள்ளிக்கு கொண்டு சென்றது ஏன்? என்பது குறித்து முசாபர்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சீனாவுடன் அமெரிக்கா போர் செய்யும்… முன்னாள் அதிபர் ட்ரம்ப் தடாலடி!