1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (09:46 IST)

வலிமை, நல்ல ஆரோக்கியம் பிறக்கட்டும்! – பிரதமரின் நவராத்திரி வாழ்த்து!

இன்று முதல் நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதும் தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று முதல் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 15 வரை கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் துர்கை வழிபாடு மற்றும் விரதங்களை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று துர்கை பூஜை மற்றும் நவராத்திரி வழிபாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துகள்.  வருகிற நாட்களில், ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருக்கின்றன. இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.