தொடர்புடைய செய்திகள்
- இரண்டே நாட்களில் பதவி பறிக்கப்படுகிறதா? பீகாரில் பெரும் பரபரப்பு
- ஆரம்பிச்ச வேகத்துக்கு கலையும் விஜய் மக்கள் இயக்கம்!? - தலைவர் ராஜா ராஜினாமா!
- பீகார் தேர்தலில் ராகுல் முழுக்கவனம் செலுத்தவில்லை – ராஷ்டிரியா ஜனதா தளம் குற்றச்சாட்டு!
- பீகாரும் தமிழகமும் ஒன்னா? செலவு பண்ண பைசா இல்ல... அழகிரி ஆதங்கம்!
- பீகாரில் 2 பாஜக துணை முதல்வர்கள்..?
பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்த கல்வித்துறை அமைச்சர்
பீகார் மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சராக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்றுக்கொண்ட மேவாலால் சவுத்ரி என்பவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்
கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருப்பதாகவும் இதனால் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதையும் இன்று காலை பார்த்தோம்
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின் கல்வி அமைச்சர் பதவியை மேலால் சவுத்ரி சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஒரு கல்வி அமைச்சராக இருந்த மேவாலால் சவுத்ரி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தேசிய கீதத்தை சரியாக பாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
