1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (10:18 IST)

காலிஸ்தான் அமைப்பிடமிருந்து கெஜ்ரிவாலுக்கு நிதி.? என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆளான முதல் முதல்வர்..!

காலிஸ்தான்  தீவிரவாத அமைப்பிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் பணம் பெற்றுள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ அமைப்புக்கு டெல்லி ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள முதல்வர் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. 
 
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுப்பி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 16 மில்லியன் டாலர் ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிலிருந்து பெற்றதாகவும் நியூயார்க்கில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி கவர்னர் சக்சேனா கோரிக்கை விடுத்துக் கடிதம் எழுதிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இது அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுமத்தப்படும் மற்றொரு பெரிய சதி என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran