தொடர்புடைய செய்திகள்
- பிரியங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் திடீர் ஆர்ப்பாட்டம்: அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
- தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் இயல்பு: எடப்பாடி பழனிசாமி
- அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு! – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
- தனுஷ் படத்தில் இருந்து வெளியேறிய ஒளிப்பதிவாளர்!
- தனுஷ் படத்தில் இருந்து வெளியேறிய ஒளிப்பதிவாளர்!
பஞ்சாப் தேர்தலில் பாஜகவோடு கூட்டு… அம்ரீந்தர் சிங் முடிவு!
காங்கிரஸில் இருந்து விலகிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.
காங்கிரஸ் தலைமை மற்றும் பஞ்சாப் மாநில எம் எல் ஏக்கள் ஆகியவரிடம் நற்பெயரை இழந்த அம்ரீந்தர் சிங், தன்னுடைய முதல்வர் பதவியை இழக்கும் சூழ்நிலைக்கு ஆளானார். இதையடுத்து கட்சியை விட்டும் விலகிய அவர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார்.
ஆனால் காங்கிரஸை விட்டு அவர் விலகிய போதே பாஜகவில் ஐக்கியம் ஆக போகிறார் என யூகிக்கப்பட்டது. அதுபோலவே இப்போது எதிர்வரும் பஞ்சாப் மாநில தேர்தலை அவர் பாஜகவோடு இணைந்து எதிர்கொள்கிறார். இது சம்மந்தமாக பாஜக மூத்த தலைவர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் யார் யாருக்கு எவ்வளவு சீட் என்பது தெரியவரும் என சொல்லப்படுகிறது.
