தொடர்புடைய செய்திகள்
- ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஒரண்டை இழுத்த பாகிஸ்தான்! - பதிலடி கொடுத்த தாலிபான்!
- ஹிண்டென்பெர்க் அறிக்கையால் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு! - அதானி வேதனை!
- தீபாவளி பயணம்: திடீரென 3 மடங்கு விலை உயர்ந்த ஆம்னி பஸ் டிக்கெட்டுகள்! - பயணிகள் அதிர்ச்சி!
- மக்களை காப்பாற்றியதை விட விருது பெரிதல்ல! நோபல் கிடைக்காதது பற்றி மனம் திறந்த ட்ரம்ப்!
- இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (12.10.2025)!
பீகாரில் காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி.. ஒவைசி தீவிர முயற்சி..!
எதிர்வரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இட்டேஹதுல் முஸ்லிமீன் கட்சி, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சவால் அளிக்கும் வகையில், வலுவான 3வது அணியை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
நவம்பர் மாதம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், AIMIM தனது பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தல்களைவிட 5 மடங்கு அதிகமாக, சுமார் 100 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
AIMIM கட்சி மதச்சார்பற்ற வாக்குகளை பிரிப்பதாக மகாகாத்பந்தன் கூட்டணி முன்பு குற்றம் சாட்டியது. இது குறித்து பேசிய பிகார் மாநிலத் தலைவர் அக்தருல் இமான், "கூட்டணி அமைப்பதற்காக RJD தலைவர்களுக்கு கடிதம் எழுதியும் பதில் வராததால், 3வது அணியை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஒத்த கருத்துடைய பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
AIMIM-இன் இந்தத் திடீர் வியூகம், பிகார் தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
