தொடர்புடைய செய்திகள்
- விஎல்சி வீடியோ பிளேயருக்கு தடை நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு!
- 7 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு: முன்னாள் முதல்வர் அதிரடி பேட்டி
- முருகனை நேரில் சந்தித்த நளினி.. கண்ணீர் மல்க நலம் விசாரித்தார்
- ராஜீவ் கொலைவழக்கு: ''6 பேர் விடுதலை'' குறித்து சீமான், டாக்டர் ராமதாஸ் டுவீட்
- ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையா?
நளினி உள்பட 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. அவர்களில் நளினி முருகன் உள்பட 6 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா என்பது இன்று தெரியும்
நளினி உள்ளிட்ட 6 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சீராய்வு மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
