1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A plea about nalini release by central govt

நளினி உள்பட 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!

supreme
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. அவர்களில் நளினி முருகன் உள்பட 6 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளுமா என்பது இன்று தெரியும்
 
நளினி உள்ளிட்ட 6 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகி தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சீராய்வு மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
வெறும் ரூ.4.79 லட்சத்தில் மின்சார கார்: ஸ்டார்ட் அப் நிறுவனம் அசத்தல்