1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (19:14 IST)

ஒரு தலைக்காதல் விவகாரம்:சிறுமியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

UTTERPRADESH
உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில்  ஒரு தலைக்காதல் விவகாரத்தில் 18 வயது சிறுமியை இளைஞர் கொலை செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அசம் நககரில் அயில் நிலையத்திற்கு  நேற்று மாலை ஒரு ரய்ல் வந்துள்ளது.

அந்த ரயிலில் இருந்து 18 வயது சிறுமி இறங்கியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற 22 வயது இளைஞர் அவருடன் வாகுவாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞ்ர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர், அவரும் தன்னைத் தானே கத்த்யால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஸ்ருமியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், அந்தச் சிறுமியின் பெயர் ஜஹானாகஞ்ச் என்றும் அவரை தன்ஞ்சய் என்ற இளைஞர் ஒருதலையாய்க் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj